மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் – ஏறாவூர் - மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு எல்லையிலுள்ள சத்துருக்கொண்டான் வளைவில் புதன்கிழமை 23.08.2017 அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் சத்துருக்கொண்டான் வளைவில் அதிகாலை 3 மணியளவில் வீதி மருங்கிலிருந்த மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வான் சாரதி உட்பட வானில் பயணித்தவர்கள் ஐவரும் படுகாயமடைந்த நிலையில் வீதியால் சென்றோரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எம். ஜெய்னுதீன் (வயது 72) அவரது மனைவி (வயது 65), எம். றிஷாட் (வயது 36) அவரது மனைவி (வயது 35) மற்றும் முஹம்மட் ஸக்கூர் (வயது 22) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments:
Post a Comment