23 Aug 2017

கிழக்கு மாகாணத்தில் சமூகங்களுக்கிடையில் பாரதூரமாக துருவமயப்பட்டு பிரிந்து தனித்து நிற்கும் நிலை காணப்படுவது கவலையளிப்பதாய் உள்ளது அமைச்சர் றவூப் ஹக்கீம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் சமூகங்கள் பாரதூரமாக துருவமயப்பட்டு பிரிந்து தனிமையாகி நிற்கும் நிலை காணப்படுவது கவலையளிப்பதாய் உள்ளது, இந்த நிலைமை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக அமைச்சர் புதன்கிழமை 23.08.2017 கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.
இது பற்றி தொடர்ந்து கூறிய அவர்@

நாம் அறிந்த வகையில் கிழக்கு மாகாணம் இன ஒருங்கிணைவுள்ள ஒரு மாகாணம். இன சமத்துவமும் இங்கிருக்கின்றது. நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி எல்லோரும் சேர்ந்து ஒரு இணக்கப்பாட்டு ஐக்கிய ஆட்சியை முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நிறுவியுள்ளோம்.

அந்த மாகாண அரசாங்கத்திலே அனைத்து சமூக மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் தழுவியதாக மாகாண நிருவாகம் நிருவாகம் செயற்படுத்தப்படுகின்றது.

ஆனால், இப்பொழுது அடிமட்டத்தில் என்ன எதிர்பார்க்கப்டுகின்தென்றால், வித்தியாசமான உணர்வலைகளுடன் கூடிய ஆதங்கம் உள்ளது.
இன நுணுக்குக் கண்ணாடி அணிந்துதான் மக்கள் அபிவிருத்தியையும், ஏனைய நிருவாகக் கருமங்களையும் உற்றுநோக்குகின்ற நிலைமை காணப்படுகின்றது.
எமது பகுதிக்கு, எமது இனத்திற்கு, எமது மக்களுக்கு என்ன வந்தடைந்திருக்கின்றது என்றே கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது போன்ற மனப்பாங்குகளால் கிழக்கு மாகாணத்தில் பாரதூரமாக துருவப்பட்டு (Pழடயசளையவழைn) பிரிந்து தனிமையாகி நிற்கும் நிலை சமூகங்களுக்கிடையில் காணப்படுகின்றது.

இத்தகைய துருவப்பட்டு தனிமையாகி நிற்கும் நிலை சமூகங்களுக்கிடையிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
மாகாண ஆளுநர், மாகாண முதலமைச்சர், மாகாண அரசியல்வாதிகள், அதேநேரம் எங்களைப் போன்று தேசிய அரசியலில் ஈடுபடுவோர் என எல்லோருமாகச் சேர்ந்து இத்தகைய சமூகங்கள் துருவமயப்பட்டுப் போகும் சூழ்நிலையை மாற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு கல்வியை ஒரு சக்திவாய்ந்த உபகரணமாகப் பயன்படுத்த முடியும்.
வளர்ந்தவர்களையும் சிறுவர்களையும் ஒன்றிணைக்க கல்வி பெருந்துணை புரியும். அதன்மூலம் பிரிந்து நின்று பலமிழந்து தனிமைப்படும் நிலைமையைத் தவிர்த்துக் கொள்ள வழியேற்படும்.

எல்லா வகையான பிரிதல்களையும் ஒன்றிணைப்பதற்கு கல்வி உதவும்.
துரதிருஷ்டவசமாக எல்லா வகையான விடயங்களையும் குறுகிய இன நுணுக்குக்காட்டி கொண்டு பரிசோதிப்பது கவலையளிப்பதாய் உள்ளது.
இது ஐக்கியப்பட்ட அரசை நடாத்திச் செல்லும் எமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.

ஆகையினால் ஒரு ஐக்கியப்பட்ட தேசிய அரசாங்கத்திற்கு உள்ள முழு முதற் கடமை இந்த இன ரீதியில் பிரிந்து தனிமைப் படுத்தப்பட்டு சமத்துவமின்றி துருவப்பட்டு வாழும் நிலைமையை மாற்றுவதாகத்தான் இருக்க வேண்டும்.
பழைய சிந்தனைகளை மறந்து ஆக்கபூர்மான புதிய நோக்கு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இது காலத் தேவையாகும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: