25 Jul 2017

கல்வி கற்பதற்கு வசதி குறைந்த மாணவர்கள் எனது வீட்டு கதவிலுள்ள அன்பு பொட்டிக்குள் உங்கள் தேவையை எழுதிப் போடுங்கள் - திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்வி கற்பதற்கு வசதி குறைந்த மாணவர்கள் எனது வீட்டு கதவிலுள்ள அன்பு பொட்டிக்குள் உங்கள் தேவையை எழுதிப் போடுங்கள் உதவி செய்கிறேன். மனம் திறந்தார் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்

10 இலட்சம் ரூபா செலவில் மருதமுனை அல்- மதீனா வித்தியாலையத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு இன்று (25.07.2017) பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவட்டப் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தாா். தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாணவர்களுக்கு பாடசாலைக் காலம் பெறுமதியானதாகும் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேணட்டும். தாம் கற்ற பாடசாலையின் வளா்ச்சிக்கு உதவி செய்வேன் என்ற எண்ணத்துடன் கல்விகற்க வேண்டும். நான் இந்தப் பாடசாலையில் கல்விகற்று இன்று திட்டமிடல் பணிப்பாளராக இருக்கின்றேன். உங்களில் ஒருவர் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளா் பதவிக்கு வரவேண்டும். 
நான் படித்து உயர்ந்த இடத்திற்கு வந்தால் நான் படித்த பாடசாலைக்கு இன்ன உதவியை செய்வேன் என்ற எண்ணம் மனதிலே இருக்க வேண்டும். எதிர் காலத்தில் இந்தப் பாடசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு என்னால் முடிந்த பங்களிப்புக்களை செய்து தருவேன் என்றாா்.

நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி, கோட்டக்கல்விப் பணிப்பாளா் ஏ.எல்.சக்கப், பிரதேச செயலக உத்தியோகத்தா்கள், ஆசிரியா்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சபையினர் , பெற்றோா் பொதுமக்கள் எனப் பலா் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: