ஏறாவூர், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராகேணிக் கிராமத்திலுள்ள தோட்டவாடியும், அந்தத் தோட்டத்தில் நடப்பட்டிருந்த பயன்தரும் மரங்களும் எரித்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (26.06.2017) இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் எம். முஹம்மத் ஹனீபா என்பவரின் தோட்டமும், தோட்டவாடியும், அங்கிருந்த மரங்களுமே எரித்து சேதமாக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதமும் இப்பகுதியில் இவ்வாறு இனந்தெரியாதோரால் மற்றொரு தோட்டமும் வேலிகளும் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அச்சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இப்பகுதியில் இடம் பெறும் இத்தகைய நாசகார வேலைகள் இன முறுகலை ஏற்படுத்துவதற்கான சதி முயற்சியா அல்லது தனிப்பட்ட பகைமை காரணமாக இடம்பெற்றவையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment