ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமாரின் அல்லல் அறுப்போம் கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 25.06.2017 ஞாயிறு பி.ப 4.00 மணி திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கான முதன்மை விருந்தினராக சி.தண்டாயுதபாணி கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண சபை கலந்து கொண்டார்.
ஆசியுரை சிவஸ்ரீ சுப்பிரமணிய சர்மா தலைவர் சர்வ மத குருமார் சங்கம் வரவேற்புரை அ.அச்சுதன் ஊடகவியலாளர் தலைமை பொ.சற்சிவானந்தம் சிரேஸ்ட ஊடகவியலாளர்
சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் கௌரவ அதிதிகள் தே.ஜெயவிஸ்ட்;ணு செயலாளர்-திருமலை நகரசபை மற்றும் வெ.இராஜசேகர் நிர்வாக உத்தியோகத்தர்-கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நூலுக்கான நூல்அறிமுக உரையை அருள் சஞ்சித் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் நூல் விமர்சனத்தை சிவப்பிரியா ஸ்ரீராம் விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம் நூல் ஏற்புரை நூல் ஆசியரியர் வடமலை ராஜ்குமார் நிகழ்ச்சித் தொகுப்பு பிரியதர்சினி வின்சன் பீரிஸ் நன்றி உரை சி.பிரகாஸ் ஆசிரியர் ஆகியோர் வழங்கினர்.
இதன் போது நுாலாசிரியரின் பெற்றோர்களான திரு திருமதி வடமலை வள்ளிநாயகி ஆகியோர்கள் கௌரவிக்கப்படுவதையும் கலந்து கொண்டவர்கள் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment