ஒன்றிணைந்த தபாற் தொழிற் சங்கங்களின் முன்னணி திங்கட்கிழமை 26.06.2017 நள்ளிரவு முதற்கொண்டு மீண்டும் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தினால் நாடெங்கிலும் அஞ்சல் சேவைகள் முழுமையாக ஸ்தம்பித்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அஞ்சற் பயிற்சிக் கல்லூரி, ஒரு விஷேட தர தபாலகம், முதலாம்தர தபாலகங்கள் 8 இரண்டாந்தர தபாலகங்கள் 13, உப தபாலகங்கள் 66 உட்பட அனைத்து 88 தபாலகங்களும் செவ்வாய்க்கிழமை 27.06.2017 காலையிலிருந்து திறக்கப்படாமலுள்ளன.
இது விடயமாக அத் தொழிற்சங்க முன்னணி விடுத்துள்ள துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@
மிக முக்கியமான பல கோரிக்கைகளை முன்னிறுத்தி எமது அமைப்பினால் ஜுன் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜுன் 14ஆம் திகதி நள்ளிரவு வரை வடக்கு கிழக்கு உட்பட நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட தொழிற் சங்கப் போராட்டம் வெற்றியளித்த அடையாள வேலை நிறுத்தம் என தற்பொழுது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் போராட்டத்திற்குப் பின்னர் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ, பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்க, பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே, தபால் தபால் சேவை மற்றும் முஸ்லிம் சேவைகள் அமைச்சின் செயலாளர் வசந்த ஹப்புஆராச்சி மற்றும் தபால் மா அதிபர் ரோஹன அபயரத்தன ஆகியோரின் ஈடுபாட்டுடன் எமது தொழிற் சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட போதும் எமது கோரிக்கைகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
எனவே,6ஃ2006 சேவைச் சட்ட யாப்பை இரத்துச் செய்து தபாலுக்குரிய பிரத்தியேகமான புதிய சேவை யாப்பொன்றை தயாரிப்பதுடன் iii வகுப்பை இரத்துச் செய்வது,
அனைத்து தரங்களிலுமுள்ள பதவி உயர்வுகள் மற்றும் சேவையில் சேர்த்துக் கொள்வதை உடன் நிறைவேற்றுதல், அனைத்து ஊழியர்களினதும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்,
தபால் உதவியாளர் பதவியை இரத்துச் செய்து முன்பிருந்ததுபோல் சீருடை உத்தியோகத்தர்களின் 18 பதவிகளையும் மீண்டும் ஸ்தாபிப்பது,
உப தபாலதிபர்களுக்கு அனைத்து அரச ஊழியர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது.
தலைமைத் தபால் அலுவலகத்தைப் பழைய கட்டிடத்தில் ஸ்தாபிப்பது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா, காலி கோட்டை, கண்டி, ஆகிய இடங்களிலுள்ள புராதன தபாலக கட்டிடங்களையும், வளாகங்களையும் அதன் காணிகளையும் சவீகரிப்பதை நிறுத்துவது.
ஆகிய இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 26ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் நடாத்துவதற்கு தொழிற்சங்க முன்னணி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
இதற்கு எமது ஒன்றிணைந்த தபாற் தொழிற் சங்கங்களின் முன்னணியிலுள்ள 24 தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க உறுதிபூண்டுள்ளன.
தபால் தபால் சேவை மற்றும் முஸ்லிம் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமுடன் சனிக்கிழமையன்று 24.06.2017 நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததையடுத்து மீண்டும் நாடுபூராகவும் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய தபால் வர்த்தக தொழிற் சங்கத் தலைவர் சிந்திக பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விவகாரத்தைக் கையாள்வதனால் தன்னால் எந்த வித தீர்வுகளையும் முன் வைக்க முடியாமலிருப்பதாக அமைச்சர் ஹலீம் சந்திப்பின்போது தமது தொழிற்சங்கத் தலைவர்களிடம் தெரிவித்ததாக சிந்திக பண்டார மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment