மட்டக்களப்பு வாவி கல்லடி பழைய பாலத்தில் சைக்கிள், பாடசாலைப் புத்தகப் பை மற்றும் காலணி என்பனவற்றைக் கழற்றி வைத்து விட்டு மாயமாய் போன மாணவனைத் தேடும் பணியில் மட்டக்களப்பு பொலிஸாரும் காத்தான்குடிப் பொலிரும் மீனவர்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை 07.06.2017 காலை கல்லடி பழைய பாலத்தின் வாவியருகே மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் உயர்தர கணிதப் பிரிவில் கற்கும் அம்பிளாந்துறையைச் சேர்ந்த கருணாகரன் பவனுஷன் (வயது 16) என்ற மாணவனின் சைக்கிள், புத்தகப் பையும் காலணியும் காணப்பட்டுள்ள பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது.
உடனயாக ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸாரோடு மீனவர்களும் இணைந்து மட்டக்களப்பு வாவியில் தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.

0 Comments:
Post a Comment