30 Jun 2017

பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும் பெண்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு உள்ளுர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் வாய்ப்பளிக்கும் ஐரோப்பிய அபிவிருத்திக்கான தலைமை ஒத்துழைப்புத் திட்டத்தின் முதற் செயலாளர் லிபுஸே சவுக்குபோவா

SHARE
பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும் பெண்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு உள்ளுர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் வாய்ப்பளிக்கும்

ஐரோப்பிய அபிவிருத்திக்கான தலைமை ஒத்துழைப்புத் திட்டத்தின் முதற் செயலாளர் லிபுஸே சவுக்குபோவா

பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும் பெண்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு உள்ளுர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் வாய்ப்பளிக்கும் என ஐரோப்பிய அபிவிருத்திக்கான தலைமை ஒத்துழைப்புத் திட்டத்தின் முதற் செயலாளர் லிபுஸே சவுக்குபோவா (ர்நயன ழக ஊழழிநசயவழைn- குசைளவ ளுநஉசநவயசல டுஐடீருளுநு ளுழுருமுருPழுஏயு) தெரிவித்தார்.

பாரம்பரிய உணவு மற்றும் கைத்தொழில் பொருட்கள் மையத்தின் கட்டுமானம் மூலம் பெண் தொழில் முனைவோர் திறன்கள் மற்றும் சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செங்கலடியில் கிழக்கின் பாரம்பரிய உணவகம் புதன்கிழமை 28.06.2017 திறந்து வைக்கப்பட்டது.

17.5 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளுர் உற்பத்திகளை விற்பனை செய்யக் கூடிய 5 கடைத் தொகுதிகள் மற்றும் சுமார் 100 பேர் அமர்ந்திருந்து உண்ணக் கூடிய உணவகம் என்பன இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 45 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினர் இங்கு நேரடியாகத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முதற் செயலாளர்@ பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு இத்திட்டம் பேருதவி புரியும்.
பல்வேறு தொழில் துறைகளில் பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் தொழில் வாய்ப்பையும் தங்களது வாழ்வாதாரத்தையும் தேடிக் கொள்வதற்கு இத்திட்டம் உதவும்.

உள்ளுர் உற்பத்திகளை தயாரித்து விற்பதற்கு இந்நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நியைலத்திற்கு மிக அருகிலே கிழக்குப் பல்கலைக் கழகம் அமைந்திருப்பதால் இது உள்ளுர் உணவு மற்றும் இன்னபிற உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பையும் பெற்றுத் தரக் கூடிய பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பல்கலைக் கழக மாணவர்கள் இங்குவந்து பாரம்பரிய உணவுகளைச் சுவைத்துக் களிக்க முடியும்.

தேகத்திற்குத் தீங்கிழைக்காத பாரம்பரிய உணவுகளை மீள அறிமுகப்படுத்தி அவற்றைப் பண்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் இந்தத் திட்டத்தின் மூலம்  வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஐநாவின் யூ.என்டி.பி நிறுவனமும் பொருளாதார வலுவூட்டலில் மிக முக்கியமான பங்காளி நிறுவனமாகும். அது அரசாங்கத்தின் இயலுமையைக் கட்டி வளர்ப்பதில் பங்காற்றி வருகின்றது.

அதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே மாவட்டச் செயலகத்தோடு இணைந்து பல்வேறு திட்டமிடலின் படிமுறை வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்றாக பயிற்சிகளையும் கட்டுமானங்களையும் தொழினுட்பங்களையும் புதிய தொலை நோக்குகளையும் உருவாக்குவதற்காக நாம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

இதன் கீழ் முதலாவது மாவட்ட அபிவிருத்தித் திட்டம் மட்டக்களப்புக்கே வந்தடைந்தது.

எமது இந்தத் திட்டம் இவ்வாண்டுடன் நிறைவுக்கு வருகின்றது.
அதேவேளை இதுபோன்றதல்லாமல் வேறு பல திட்டங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

எமது உதவித் திட்டத்தின் கீழ் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையமும் ஏறாவூர் பற்றுப் பிரதேசத்தில் கடந்த நொவெம்பெரில் திறந்து வைக்கப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: