27 Jun 2017

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்பவர்களுக்காக கூமுனை காட்டுப் பாதை ஜுலை 15 முதல் ஓகஸ்ட் 2 வரைத் திறப்பு

SHARE
மட்டக்களப்பு – பொத்துவில் கடலோரப் பாதை வழியாக கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாத யாத்திரை செல்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி  முதற்கொண்டு ஓகஸ்ட் 02ஆம் திகதி வரை கூமுனை காட்டு வழிப் பாதை பாதை திறந்திருக்கும் என உகந்தை முருகன் ஆலயத்தின் பிரதம வண்ணக்கர் திஸாநாயக்க சுது நிலமே தெரிவித்தார்.


நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்திற்குப் பாத யாத்திரை மூலம் செல்வோர் இந்த குறுந்தூர காட்டுப் பாதையைப் பயன்படுத்துவதுண்டு.

கடந்த 20ஆம் திகதி அம்பாறை மாவட்டச் செயலகத்தில் உகந்தை முருகன் ஆலய உற்சவம் மற்றும் யாத்ரீகர்களுக்கான ஏற்பாடு தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கூமுனை காட்டுப்பாதையைத் திறப்பதற்கான அனுமதி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் தரப்பட்டது என வண்ணக்கர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உகந்தை முருகன் ஆலயத்திற்குச் செல்வோர் தம்வசம் கொண்டு செல்லும் வெற்று பொலித்தீன் பை, பிளாஸ்டிக் போத்தல்கள் போன்றவற்றை காடுகளில் வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுபானங்களை எடுத்தச் செல்லுதல், காடுகளுக்கு தீ வைத்தல் மற்றும் மரங்களை வெட்டுதல், மிருகங்களைப் பறவைகளை வேட்டையாடுதல், புதைபொருள் தோண்டுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் எனபனவும் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

இத்தீய காரியங்களில் எவரேனும் ஈடுபட்டால் வனபரிபாலனத் திணைக்களம் மற்றும் பொலிஸார் ஆகியோர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கெதிராக  கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: