கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளில் தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கும் 445 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம்; வழங்குவதற்காக அமைச்சரவைப் பத்திரத்தில் திருத்தம் கொண்டு வந்து சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சர் உடன்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் அமைச்சு அலுவலகத்தில் புதன்கிழமை 21.06.2017 பிற்பகல் நடைபெற்றது.
இதில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் ஏற்கெனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பத்திர அனுமதியின் பிரகாரம் கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் பாதிப்படையும் நிலைமை காணப்பட்டுள்ளதாகவும் இது குறித்து தாம் அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பது தொடர்பில் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்படப்போவதால் கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் அநீதி இழைக்கப்படாமல் நியமனம் பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment