27 Jun 2017

மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா ஆரம்பம்.

SHARE
மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா இந்து சமய ஆசார நெறிமுறைகளுக்கமைவாக புதன் கிழமை இரவு ஆரம்பமானது. 


ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வந்தது. 

ஆலயத்தில் கூட்டுப்பிராரடதனை, மேள தாள வாத்திய இசைக்கச்சேரி, என்பனவும் இடம்பெற்றன. இதன்போது பல நூற்றுக் கணக்கான பக்ர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாலயத்தின் தீர்த்தோர்ச்சவம் எதிர் வரும் 30 ஆம் திகதி ஆலய முன்றலிலே அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில் இடம்பெறவுள்ளது. கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ.ஸ்ரீ.சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றன.













SHARE

Author: verified_user

0 Comments: