18 Jun 2017

கல்வி இராஜாங்க அமைச்சரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பில் 3வது சர்வதேச சர்வதேச யோகா தினம்

SHARE
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஜுன் 21 சர்வதேச யோகா தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக எதிர்வரும் ஜுன் 20ம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்  காலை 6.30 மணிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் ‪பங்குபற்றுதலுடன் யோகா பயிற்சி இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழக செயலாளர் எல்.தீபாகரன் தெரிவித்தார்.

இந்த ஏற்பாடு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது@ தமிழரின் ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான யோகா கலையின் சிறப்பை உணர்த்தும் முகமாகவும் மட்டக்களப்பில் யோகா கலையை பிரபல்யப்படுத்தும் நோக்குடனும் சர்வதேச யோகா தினத்திற்கு முந்திய நாளில் மட்டக்களப்பில் பெரிய அளவில் யோகா பயிற்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மாணவர்கள்; 600 பேர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இதில் ஆர்வமுள்ள அனைவரும் இணைந்து கொள்ளலாம் என்றும் பங்குபற்றுவோருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: