மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட துணைநீலைவணையில் புதன் கிழமை (01) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிழிழந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது……
வேக்கரி உணவுப் பொருட்களைவிற்பனை செய்து வரும் முச்சக்கரவண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் துறை நீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேருக்கு நேர் மோதியதனாலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற துறைநீலாவணைக் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கருணாநிதி ரஜிந்தன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிழிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்ற இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர்
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை மீட்டுள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினன்றனர்.
0 Comments:
Post a Comment