மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்
பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேசத்தில் வைத்து, சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்படடிருந்தார்.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட அவர் மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்பற்றவர் என்பது தெரியவந்ததால் புதன்கிழமை விடுவிக்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment