5 Mar 2017

கடற்கரையில் வயோதிப ஆணின் சடலம் மீட்பு

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிப ஆணொருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை 05.03.2017
மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிறு அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சடலம் கரையொதுங்கிக் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
அதனடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற் கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் சுமார் 55 - 60 வயது மதிக்கத்தக்கது எனத் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: