கடந்த 26.12.2016 அன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்கக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது
என்ற விசமத்தனமான பிரச்சாரத்தை நான் முற்றாக மறுக்கின்றேன். இவ்விடையத்தில் மீக நீண்டகாலமாக அவதானிக்கப்பட்ட விடையம் சம்மந்தப்படாத விடையங்களுக்காகத்தான் நேரம் செலவிடப்படுகின்றது. அதில்தான் மாகாணசபை உறுப்பினர்களும் அதிக நேரத்தைச் செலவிடுகின்றார்கள். இவகைள் விளம்பரத்திற்காகத்தான் நடைபெறுகின்றன.
என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் மட்டக்களப்ப மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார்.
கடந்த 26.12.2016 அன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்கக்கூடாது என்ற விடையம் தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (01.01.2016) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….
இவற்றை ஒரு ஒழுங்கமைப்பாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அந்த முதல் கட்டப் பதிவைச் செய்ததன் பின்பு, கூட்டம் முடிந்ததன் பின்னர்
ஊடகவியலாளர்களை அனுமதித்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட விபரமாக ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நாம் ஊடகவியளார்களிடத்தில் அனுமதியைக் கோரியிருந்தோம்,இதனைத்தான் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக இருந்த நான் அறிவித்திருந்தேன்.
ஒரு சில மாகாண சபை உறுப்பினர்கள் இவ்விடையத்தைப் பூதாகரமாக்கியிருந்தார்கள். இவ்விடையம் எனக்கு ஒரு பிரச்சனையாக நான் அதனைக் கருதவில்லை, அது மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு எற்பட்ட ஒரு பின்னடைவாகத்தான் அதனை நான் பார்க்கிறேன்.
எதிர்காலத்தில் மாவட்ட அபிவிருத்திக் கூழுக் கூட்டம், பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேச வேண்டிய விடையங்கள், போன்றவற்றில் பேச வேண்டிய விடையங்களைத்தான் அ ங்கு பேச வேண்டும். வெறுமனே அரசாங்க அதிகாரிகளை எழுப்பி வைத்து குற்றவாளிக் கூண்டில் வைத்து கேள்வி கேட்பது போன்று அவர்களை அகௌரவப்படுத்தக் கூடாது என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. இதுதான் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கின்றது.
ஒரு மின் கம்பம் மாற்றப்பட வேண்டும் என்பதற்காக மாட்ட அவிருத்திக் குழுக் கூட்டம் நடாத்தப்படும் வரை ஒரு மக்கள் பிரதிநிதி காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இவ’வாறான விடையங்களை உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இலகுவில் மேறற் கொள்ளலாம் இவ்வாறு ஆயிரம் விடையங்களை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்த நடைமுறைகளை மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிப்பார்களென்றால், எதிர் காலத்தில் மேற் கொள்ள வேண்டிய விடையங்கள், அபிவிருத்தி நிதிகள் ஏன் திரும்பிச் செல்கின்ற, விடையங்கள் பற்றி ஆராயாமல் தொடர்ந்து பேசியதையே பேசிக் கொண்டிருக்கின்ற விடையத்தைத்தான் இக்கூட்டங்களில் நாம் கண்டிரு;ககின்றோம். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமையில் எனக்கு மிக நீண்ட அனுபவமிருக்கின்றது. இவ்விடத்தில் ஊடகவியலாளர்களிடத்திலே, அதிகாரிகளிடத்திலே, அரசியல்வாதிகளிடத்திலோ கோபப்படுவது கிடையாது. இதனை ஒரு நியாக பூர்வமாக, சிறப்பாகச் செய்ய வேண்டும் என்கின்ற மாட்டத்தின் அங்கீகாரம் மிக்க ஒரு சபை திறம்படச் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தானேஒளிய இதில் வேறொன்றுமில்லை என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment