5 Jan 2017

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரத்தை செய்வது தேசத்துரோகமாகும் பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல். முனாஸ்

SHARE
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரத்தை செய்வது தேசத்துரோகமாகும் என அம்பாறை மாவட்ட
பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல். முனாஸ் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போதைப் பொருள் நுகர்வு சம்பந்தமாக வியாழக்கிழமை (05.01.2017) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

போதைப்பொருளை ஒழிப்போம் நிம்மதியான வாழ்வை வாழ்வோம் என்று இன்றைய சூழலில் அனைவரும் கூறிக்கொண்டிருக்கும்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருந்தத்தக்க விடயமாகும்.

இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் பல்வேறு கஇன்னல்களுக்கு முகங்கொடுப்பதோடு பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர்.

இப்பொழுது வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. சில நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளின் போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் போதைப் பொருட்கடத்தல் மேற்கொள்ளப்படுகின்றன.

மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதனாலும், இதற்கு உடந்தையாக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறிவருகின்றது.

போதைப் பொருட்பாவனையால் ஏற்படும் தீங்குகளும், பாதிப்புகளும், அழிவுகளும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தற்கால இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளல் கட்டாயமாகும்.

முழு நாடுமே பயனடையக்கூடிய வகையில் இளைஞர்கள் சரியாக நடாத்தப்பட்டால் போதைப்பொருள் தடுப்பு மாத்திரமன்றி நாட்டில் எவ்விதப்பிரச்சனைகளும் ஏற்படாதவாறு சகல நிருவாகத்தையும் எடுத்துச் செல்ல வாய்ப்பேற்படும்.

போதைப்பொருளுக்கு விநியோகம் விற்பனை மற்றும் பாவனை ஆகியவற்றுக்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகள் தொடக்கம் ஏனைய அனைவரும் இப்படியான விடயங்களைத் தவிர்த்து சமூகத்துக்கு நற்பிரஜகளை உருவாக்கும் சிந்தனையில் நல்லதை எடுத்து மோசமானவைகளைத் தடுத்து வாழ பழகிக் கொள்ள வழியேற்படுத்த வேண்டும்.

போதைப்பொருள் நுகர்வு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: