15.01.2017 ஆம் திகதி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிழக்கு மாகாணசபையின் கிராமங்களை அபிவிருத்தி செய்வோம் என்னும் திட்டத்துக்கமைய 2016ஆம் ஆண்டின் நிதி இதுக்கீட்டில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான
கல்முனை ஜவாத் ரஷாக், சம்மாந்துறை ஐ.எல்.எம்.மாஹீர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் 85இலட்ச ரூபா ஒதுக்கீட்டில் செய்து முடிக்கப்பட்ட வேலைகள் நேற்று மாலை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
கல்முனை ஜவாத் ரஷாக், சம்மாந்துறை ஐ.எல்.எம்.மாஹீர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் 85இலட்ச ரூபா ஒதுக்கீட்டில் செய்து முடிக்கப்பட்ட வேலைகள் நேற்று மாலை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீரின் அழைப்பில் மத்தியமுகாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் நஷார் ஹாஜியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதல்மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய மக்கள் பிரதிநிதிகளான சம்மாந்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினஎர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர் கல்முனை ஜவாத் ரஷாக் ஆகியோருடன் ஸ்ரீ.மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது நான்கு கொங்கிரீட் வீதிகளும், மத்தியமுகாமுக்கான பல்தேவை கட்டிடமும் மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன், சவளக்கடை பிரதேசத்தில் இயங்கும் தாருல் ஹிக்மா மத்ரசாவின் பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் கேட்டறிந்ததுடன் தனது சொந்தநிதியில் இருந்து முக்கிய தேவைக்காக ஒரு தொகை பணத்தினையும் கையளித்தார். அத்துடன் சென்றல் கேம்ப் ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலய புதிய வகுப்பறைக் கட்டிடத்தையும் திறந்து வைத்ததுடன் புதிதாக மத்தியமுகாம் அஸ்-சிராஜ் மகாவித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லும் நடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மத்திய முகாம் பிரதான வீதியில் பிரச்சாரப் பொதுக்கூட்டமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் நெளபல் தலைமையில் இடம்பெற்றது.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 2.00 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட வடிகால் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் நெளபல், பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத், கிராம சேவையாளர் திருமதி மதீனா, அபிவிருத்திக் உத்தியோகத்தர் நஜீமா, சமுர்த்தி உத்தியோகத்தர் சாஜஹான் , கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் பெளசுல் , அபிவிருத்திக் குழுக் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

0 Comments:
Post a Comment