14 Dec 2016

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக சமூகமட்ட விழிப்புணர்வுக் குழுக்களை அமைக்க நடவடிக்கை மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் கனகசபை சுதர்சன்

SHARE
சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக சமூகமட்ட விழிப்புணர்வுக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் (community Correction Officer)    கனகசபை சுதர்சன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்…

மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் இடம்பெறுகின்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக உடனடி சட்ட  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற விடயத்தை சமூக  நலன் விரும்பிகள் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா Magistrate and Additional District Judge Manikkavasagar Ganesharajah  அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

நீதிபதி அவர்களின் கரிசனையின்பால்    இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக  சமூக மட்ட விழிப்புணர்வு குழுக்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பில் இயங்குகின்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரிவு சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, சட்ட உதவி ஆணைக்குழு, பெண்கள் அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழு, மத்தியஸ்த சபை தவிசாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட உத்தியோகத்தர், கிராம மற்றும் அபிவிருத்தி சங்கம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், பெண்கள் அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர்கள், மற்றும் சமூக நல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதி நிதிகள் ஆகிய பல்தரப்பினரையும் கொண்ட சமூக மட்ட விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: