6 Dec 2016

என்னுயை குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து ஆண்டுகளாக படுகொலை செய்யப்பட்டார்கள் - பெண் சாட்சியம்.

SHARE
என்னுயை குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து ஆண்டுகளாக படுகொலை செய்யப்பட்டார்கள் இவை அனைத்தும் மட்டக்களப்பு  - ஆரையம்பதியிலே உள்ள எங்கள் சொந்த வீட்டிலேயே மிகவும் மேசமாக அரங்கேற்றப்பட்டன. என அழுகைக் குரலோடு தெரிவிக்கின்றார் மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி இராஜதுரைக் கிராமத்தைச் சேர்ந்த 57 வயதுடைய மேகனாம்பிகை.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக் குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் திங்கட்;கிழமை (05) இடம்பெற்றபோது அவர் வலந்து கொண்டு இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்…..

என்னுடைய உடன் பிறந்த சகோதரன் தம்பிராஜா குரகுலசிங்கம் வயது 33, 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அன்று இரவு 7 மணியளவில் இனந்தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் வீட்டிலிருந்து வெளியே கூட்டிச்செல்லப்பட்டு பக்கத்து வீதியில் வைத்து தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நேரத்தில் அவர் அரச வங்கியான மக்கள் வங்கி உத்தியோகஸ்த்தராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். இவர் சுடப்பட்ட காரணம் இன்றுவரை ஏன் என எமக்குத் தெரியாது.

ராஜா மதுபானசாலையின் உரிமையாளரான 59 வயதான என்னுடைய தந்தையாராகிய இளையதம்பி தம்பிராஜா 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி எங்களுடைய சொந்த வீட்டில் அன்றயத்தினம் தூக்கத்திலிருந்த வேளையில் இரவு 10 மணியளவில் தலையிலும், மார்பிலும், இனந்தெரியாத நகர்களால், துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இது ஒருபுறமிருக்க 30 வயதுடை என்னுடைய உடன்பிறந்த சகோதரி தம்பிராசா மலர் என்பவர் 1992 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி எங்களுடைய வீட்டில் இருந்த போது இனந்தெரியாத ஆயுததாரிகள் வெளியே இழுத்துச் சென்று பெண்ணுறுப்பிலே சுட்டு படுகொலை செய்யப்படார்.

எனது இரத்த உறவுகளான இந்த மூன்று பேரும் அடுத்தடுத்த ஆண்டுகளாக படுகொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் இன்றுவரையில் எமக்குத் தெரியாதுள்ளது. நாங்கள் ஆரம்பத்தில் சமூகத்தில் நல்ல நிலைமிக்க கௌரவமாக வாழ்ந்து வற்தோம். தற்போது நான் தனிமையை உணர்கின்றேன். எனக்கு இழைக்கப்பட்ட அனைவரின் படுகொலைகளுக்கு நீதி வேண்டும். இதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதோடு எதிர்காலத்தில் இவ்வாறு யாருக்கும் நடைபெறாமலிருக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: