11 Dec 2016

உறவுகளுக்காக ஏங்கும் மட்டக்களப்பு மக்கள்

SHARE
மனித உரிமை தினமான டிசம்பர் 10 சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், என பலர் இதன்போது இனைந்திருந்தனர்.

இதன்போது கலந்து கொண்டிருந்த காணாமல்; போனவர்களின் உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்த கருத்துக்கள்…….

எனது மகன் உதயணன் ரமேஸ் 21 வயத்தில் 1992 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார். இந்நிலையில் 2016.03.12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையிருந்து நீதிமன்று ஒன்றுக்கு சிறைச்சாலை பேரூந்து ஒன்றில் வந்து இறங்கிய காட்சியை தொலைக்காட்சி செய்தி ஒன்றில் பார்த்தேன். தற்போது எனது மகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதாக உணருகின்றேன். 

தற்போது நான் வறுமையிலுள்ளேன் எனக்கு எதுவித உதவிகளும் கிடையாது எனது மகரைப் பார்ப்பதற்குக்கூட வசதியில்லாமல் உள்ளது எனவே எனது மகனை விடுதலை செய்யுமாறு வேண்டுகின்றேன். என மட்டக்களப்பு 11 ஆம் குறுக்கைச் சேர்ந்த 64 வயதுடைய இ.விமலாசினி தெரிவித்தார்.

இந்நிலையில்…. எனது 2 அண்ணாமாரும், ஒரு தம்பியுமாக 3 பேர் எனது குடும்பத்தில் காணாமல் போயுள்ளார்கள். ஒரு அண்ணா இரண்டு கால்களும் இயங்காத நிலைலயில், மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு முன்னால் தேங்காய் வியாபாராம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் 1992.03.12 ஆம் தகதி ராசிக் குறுப் என்ற குழுவினர்தான் எனது அண்ணாவை பிடித்துக் கொண்டு சென்றதாகத்தான் நாங்கள் அறிந்தோம் 21 வயதில் காணாமல் போனார் இதுவரையில் எனது அண்ணாவைக் காணவில்லை. உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்ற தகவலும் எமக்குத் தெரியாமல் அலைந்து திரிகின்றோம்.

இதுபோன்றுதான் எனது ஏனைய 2 சகோதரர்களும், 1992 ஆம் அண்டுதான் காணாமல் போயுள்ளார்கள்.

எங்கு கேட்டாலும், எனது சகோதரர்கள் பற்றிய தகவல் இல்லை என்றுதான் தெரிவிக்கின்றார்கள், எனது சகோதரர்கள் காணாமல் போனதிலிருந்து தினமும்  அழுது அழுது எங்கள் அம்மா நோயாளியாகிவிட்டார். எனவே எங்கிருந்தாலும் எனது சகோதரர்களைத் தேடித்தரவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனத் தெரிவிக்கின்றார் மட்டக்ளப்பைச் சேர்ந்த மேரி மெடோன என்ற 32 வயதான பெண்மணி.

மேரி மெடோனவின் கருத்து இவ்வாறு இருக்க….. சிறுவயத்தில் தந்தையை இழந்தத்தினால் உழைத்து குடும்பத்தைப் பார்க்க வேண்டிய பொறுப்பு எனது மகனுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டு விட்டு கூலி வேலைகளை எனது மகன் செய்து கொண்டு எனது குடும்பத்தைப் பார்த்து வந்தான் இந்நிலையில் விடுதலைப் புலிகள் எனது மகனைக் 2001 ஆம் ஆண்டு கடத்தி விட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது. பின்னர் எதுவித தொடர்பும் இல்லை 2 வருடங்கள் கழிந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் எனது மகள் உள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது. ஆனால் மகனை நேரில் சென்று பாத்ததில்லை.

ஆனாலும் எனது மகனின் தொடர்பு இன்றுவரை கிடையாது தவிக்கின்றோம். எங்கிருக்கின்றார்ன என்ற தகவலும் எமக்குத் தெரியாதுள்ளது. இன்னும் எனக்கு 4 பிள்ளைகள் உள்ளார்கள் கணவனையும் இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த எனது மகனைத் தேடித்தாருங்கள்.

எனது குடும்பத்திற்கு ஆதாரம் வழங்குவதற்குக்கூட யாரும் இதுவரையில் முன்வரவில்லை. அரசாங்கமும் எதுவித உதவிகளையும், எமக்கு மேற்கொள்ளவில்லை. எனத் தெரிவிக்கின்றார் தனது சிவநாதன் என்ற 28 வயது மகன் காணாமல் போனது தொடர்பில் மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த சி.செல்வி எனுத் தாய் தெரிவிக்கின்றார்.

இதுபோன்று….  மட்டக்களப்பு கறுவாக்கேணியில் வசித்து வந்தவேளை எனது கணவர் கூலிவேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு கூலிவேலைக்குச் சென்ற எனது கணவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. பின்னர் ஆமிக்காரங்கள் எனது கணவரைக் கூட்டிக்கொண்டு சென்றுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்தது. எனது கணவன் பற்றிய தகவல்களை அறியத்தாருங்கள்.

எனக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள் இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு  எனது கணவர் காணாமல் போனதிலிருந்து இன்றுவரை எனது பிள்ளைகளுடன் நான் அங்குமிங்குமாக அலைந்து கூலி வேலை செய்துதான் எனது 2 பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றேன். இந்நிலையில் எனது ஒரு மகளுக்கு மிகவும் கஸ்ற்றப்பட்டு திருமணம் செய்து கொடுத்துள்ளேன் மற்றய மகளுக்கு 25 வயது ஆகின்றது அவருக்கும் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் ஆனால் வீடுவாசல் இல்லாத்தினால் இருக்கின்றேன்.

மிகவும் கஸ்ற்றத்தின் மத்திக்கத்தில் வாழ்ந்து வரும் எமக்கு யாரும் உதவுவதற்குக் கூட முன்வரவில்லை. எனது மகள் வாழைச்சேனையிலுள்ள கடை ஒன்றில் வேலை செய்கின்றார். அவருக்குக் கிடைக்கும் சிறிய வருமானத்தில் எமது குடும்பம் நகர்கின்றது. எனவே ஒரு வீட்டு வசதியாவது கிடைக்குமாக இருந்தால் எனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு வாய்ப்பாக அமையும். எனத் தெரிவிக்கின்றார் மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேரந்த அனிஸ்ற்றா யோஜ் என்ற பெண்மணி.







SHARE

Author: verified_user

0 Comments: