11 Dec 2016

செட்டிபாளையத்தில் அதிகாலை வேளையில் பாரிய விபத்து

SHARE
(துறையூர் தாஸன்) 

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் டிப்பர் ரக வாகனமொன்று பலத்த சேதங்களுக்கு உள்ளாகி இருப்பதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது….
களுவாஞ்சிக்குடியில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த கோழிகளை ஏற்றும் டிப்பர் ரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் செட்டிபாளையம் முருகன் ஆலயத்துக்கு முன்னாலுள்ள மரம் ஒன்றில் மோதியதினாலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் சாரதியும் நடனத்துனரும் தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளதுடன் வாகனத்தின் முற்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது

இச்சம்பவம் தொடர்பாக மேலாதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர். 






SHARE

Author: verified_user

0 Comments: