25 Dec 2016

மருதமுனை மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இரத்த தான நிகழ்வு

SHARE
மருதமுனை மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இரத்த தான நிகழ்வு
 (24.12.2016 சனிக்கிழமை) கமு/அல்-மானார் மத்திய கல்லூரியில் இன்று காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் 3 பெண்கள் அடங்கலாக 79 பேர் இரத்த தானம் செய்து தமது பங்களிப்பினை வழங்கிவைத்தனர்.

சென்ற வருடமும் டிசம்பர் மாதம் மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் இது போன்றதொரு இரத்த தான முகாம் வெற்றிகரமாக நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது










SHARE

Author: verified_user

0 Comments: