(துறையூர் தாஸன்(சஞ்சயன்)
பாடத்திட்டத்தில் 27 தொழிநுட்ப பாடங்களை புகுத்துவதற்காக அரசு திட்டமிட்டுவருகிறது ஐந்தாம் ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெற்றோருக்கான பரீட்சையாகவுள்ளது, பரீட்சைக்கு
மாணவர்களைத் தயாராக்குவது பெற்றோரின் தலையாய கடமையாக அமைவதுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, அருகில் இருந்து தட்டிக் கொடுத்து அவர்களை ஊக்கப் படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று 2016 இல் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் குறித்தவெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்திபெற்ற மாணவர்களைபாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் முதன்மை அதிதியாகவும் மற்றும் மட்டக்களப்பு மேற்கு ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், மட்டக்களப்பு மேற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) செ.மகேந்திரன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மேற்கு ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், அப்பகுதிக்கு ஆற்றிய கல்விச் சேவையினைப் பாராட்டி, கிழக்கு மாகாண விவசாயஅமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர், கற்றலை ஊக்குவித்து ஆற்றலை வளர்ப்போம் எனும் மகுட வாக்கியத்துக்கேற்ப மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று கடந்த (2016) புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் குறித்த வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற ,12 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு, பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி இதன்போது பாராட்டிக் கௌரவித்ததோடு, மாணவர்களுக்கு, ஆங்கில அகராதிகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment