13 Nov 2016

இளம் பெண்ணின் சடலம் அம்பிளாந்துறையில் மீட்பு

SHARE
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை ஆற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம்  சனிக்கிழமை ( 13) இரவு வேளையில் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிசோலை பொலிசார்  தெரிவித்தனர்.
ஆற்றிற்கு மீன்பிடிக்க சென்றவர்களே இச்சடலத்தினை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் பழுகாமம் கிராமத்தினைச்சேர்ந்த மணியம் சகிலா(வயது27)  என இனங்காணப்பட்டுள்ளது
சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் இவரது கணவர் ஏற்கனவே விபத்தில் சிக்கி இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மரணத்திற்கான காரணம் வெளிப்படாத நிலையில்  இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: