21 Sept 2016

வட பகுதியில் இருந்த முஸ்லிம் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக வெளியேற்றினார்களே தவிர, திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை

SHARE
கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டு தூண்டி
விட்டதனாலேயே தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் குரோத மனப்பான்மை பரவும் என்ற அச்சம் காரணமாகவே வட பகுதியில் இருந்த முஸ்லிம் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக வெளியேற்றினார்களே தவிர, திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மன்னிப்பு கோரப்பட்ட போதிலும் பலர் இன்றுவரை இன சுத்தகரிப்பு என்ற வார்த்தைப் பிரயோகத்தை கூறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் குரோத மனப்பான்மை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றினார்களே தவிர, திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் கடந்த 1990 ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பா. அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு இனப்படுகொலை நினைவு தினத்தில் மக்களை அணிதிரட்டி நடத்துவதற்கு கூட நல்லாட்சியில் அச்சமான சூழல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற புதுக்குடியிருப்பு இனப் படுகொலையின் ஊடாக முஸ்லிம் ஊர்காவற்படையினர் செய்திருக்கின்றார்கள் என பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி தான் ஆட்சி செய்திருந்தது. 90 ஆண்டுக்கு காலத்திற்கு முற்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.
ஆகவே முஸ்லிம் இளைஞர்களை தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது. அதற்கு எதிராகத்தான் முஸ்லிம் ஊர்காவற்படையினரை பிரித்தாழும் தந்திரத்தை செய்ததன் காரணமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பாரிய விரோத நிலை ஏற்பட்டது.
இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அரசாங்கம். குறிப்பாக அம்பாறை வீரமுனைப் படுகொலையில் இருந்து முஸ்லிம் ஊர்காவற்படையினர் நேரடியாகப் பங்குபற்றியிருக்கின்றார்கள்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற படுகொலை அனைத்திலும் முஸ்லிம் ஊர்காவற்படையினர் இருந்திருக்கின்றார்கள். இதில் அரசாங்கம் வெற்றி பெற்றது. கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமாகாணம் வரை முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஒரு குரோத மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றினார்களே தவிர திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை.
26 வருடங்களுக்கு பிற்பட்ட காலத்திலும் கூட பல படுகொலைச் சம்பவங்களை நினைவுகூருகின்ற போது, கடந்த அரசாங்கத்தில் இந்த நினைவு தினத்தை அனுஸ்டிக்கக்கூடாது என்று நீதிமன்ற ஆணையைப் பிறப்பித்துக் கொண்டு தடுத்த வரலாறுகளும் உண்டு.
நல்லாட்சி அரசாங்கத்தில் பல போராட்டங்களை செய்யக்கூடியதாக உள்ளது. படுகொலை தினங்களை அனுஸ்டிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறான படுகொலை சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்பதை எமது சந்ததியினருக்கு எடுத்துக் காட்டும் முகமாகவே நினைவு தினங்களை அனுஸ்டிக்கின்றோம். இதன்மூலம் தான் இன்னுமொரு படுகொலை சம்பவங்கள் இந்த மண்ணில் இடம்பெறாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.  
SHARE

Author: verified_user

0 Comments: