20 Sept 2016

பன்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்த சர்வதேச ஆய்வுமாநாடு -உலகமயமாக்கல் சூழலில் பாரம்பரியக் கலைகள்

SHARE

(துறையூர் தாஸன்)

பன்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்த சர்வதேச ஆய்வுமாநாடு -உலகமயமாக்கல் சூழலில் பாரம்பரியக் கலைகள்
 
பன்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்த சர்வதேச ஆய்வு மாநாடு -உலகமயமாக்கல் சூழலில் பாரம்பரியக் கலைகள்
உலகமயமாக்கல் சூழலில் பாரம்பரியக் கலைகள் எனும் தொனிப்பொருளைபறைசாற்றும் வகையில் சர்வதேசமாநாடானது சுவாமிவிபுலானந்தாஅழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 2016.09.15,16,17, ஆம் திகதிகளில் நிறுவகத் தலைவர் கலாநிதிசி.ஜெயசங்கர் தலைமையில் வெகுசிறப்பாககோலாகலமாக நடந்தேறியது.

சர்வதேச ஆய்வுமாநாடாட்டில் பேராசிரியர் அமீர் அலிDr.KiranGrewall,Dr.Sanjay Kumar Ganguly  போன்றவர்கள் இவ் ஆய்வுமாநாட்டுக்கானதிறவுகோல் விலாசத்தைக் கொடுத்திருந்தனர். 

உலகமயமாக்கல் சூழலில் பாரம்பரியக் கலைகள் எனும் ஆய்வுமாநாட்டில் புலமைப் பீடத்திலுள்ளகல் வியியலாளர்களாக பேராசிரியர்.சி.சிவசேகரம் பேரா.சி.சித்ரலேகா பேரா.சி.மௌனகுரு பேரா.எம்.அனீஸ் பேரா.செ.ரவீந்திரன் பேரா.சபா ஜெயராஜா பேரா.சி.சிவலிங்கராஜா பேரா.ரி.தர்மராஜ் பேரா.என்.சண்முகலிங்கம் பேரா.சுந்தர் காளியப்பன் பேரா.அ.ராமசாமிபேரா.DeoNathpathakகலாநிதி ஹரினீ அமனசூர்யா கலாநிதி ஜோசி அஜய் சிந்தாமணிகலாநிதி எஸ்.ரகுராம் கலாநிதி, திருச்சந்திரன் கலாநிதி ஹர்ஸனா ரம்புக்வெல கலாநிதி தர்ஸன் அம்பலவாணர், செரீன் சரூர் கலாநிதிசி. ஜெயசங்கர் அவர்களும் பிரசித்திபெற்ற சிறந்த கலைஞர்களான சோபாபதமநாதன் எஸ்.பத்மலிங்கம் சி.தேனுவர Dr.G.R.Constantine அருட்சேகரம் Dr.A.W.WaruniChandrasena  பா.அகிலன் க.இரகுபரன் ரீ.மதுசூதனன் கே.விமலநாதன், வேல் ஆனந்தன், எம்.கோபாலகிருஸ்ணன் நிர்மலவாசன் கலாநிதி சௌமியாலியனேகே பாலிவிஜயரெட்ன போன்றஉள்ளுர்க் கலைஞர்களும் பிறநாட்டுக் கலைஞர்களும் முதல் நாள் இரண்டாம் நாள் ஆய்வுமாநாட்டில் பிரதானஅதிதிகளாகவும் ஆய்வரங்கத் தலைவர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

பன்மைத் தன்மையை வெளிப்படுத்திய சர்வதேச ஆய்வு மாநாடானது இருபது குழுவினரை சமாந்தரமாக இரண்டு நாட்களில் அமைத்து மொத்தமாக நூறிற்கு மேற்பட்டஆய்வுக் கட்டுரைகளை அவையோர் முன் அரங்கேற்றியது. இக் கட்டுரைகளின் தலைப்பை அறிவதன் ஊடாகவும் வெவ்வேறுவகையான கலையாற்றுகைகளை வெவ்வேறுவகையான வெவ்வேறு சமூகத்தின் உணவு வகைகளை நுகர்வதன் மூலமாகவும் இவ்வாறு இன்னோரன்ன பல செயற்பாடுகளின் மூலமாக இவ் ஆய்வு மாநாடானது எதையுணர்த்தவருகிறது என்பதையாவரும் உணரக்கூடியதாகவுமிருந்தது.

17.09.2016 இரண்டாம் நாள் சனிக்கிழமையன்று ஆங்கிலப் பிரிவு மண்டபத்தில் அவைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் பொறுப்பில் முற்பகல் 11.00-02.00 மணி வரையுள்ளகால வேளைக்குள் Social and Legal challenges of Local and traditional Instrument of Tamil if Srilanka  எனும் தலைப்பு சார்ந்து பறைநீதிக்கான பறை பெண்ணிலை வாதிகளானபறையறைவோரின் ஓர் அனுபவம் எனும் கட்டுரையும் நாதஸ்வரஆற்றுகைத் தளத்தின் தற்காலநிலைபற்றிய கட்டுரையும் பறைமேளக் கலையானதுஎதிர்கொள்ளும் சவால்களும் இக்கலைக்கான சமூக அங்கீகாரத்திற்கான முன்னெடுப்புகளும் மட்டக்களப்பு பறைமேள சமூகத்தினரை மையப்படுத்திய ஆய்வுக் கட்டுரையும் ஆலயங்களில் இலத்திரனியல் தாளவாத்தியக் கருவியின் வருகையால் தாளவாத்தியக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் என்றகட்டுரையும் பாரம்பரியவாத்தியக் கருவிகளை உருவாக்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் கூட்டுறவு அமைப்பின் தேவையும் என்ற கட்டுரையும் கூட்டுறவின் நன்மைகளும் அதன் சாத்தியப்பாடுகளும் என்றகட்டுரையும் Universty  Government Industry :- An Initiative for an Outreach Culture for Performing Arts Institutes    என்ற ஆய்வுக் கட்டுரையும் படிக்கப்பட்டது. இவ்வாறாக அதேநேரவேளைக்குள் (11.00 – 02.00) பரீட்சை மண்டபத்தில் கலாநிதி ஹர்ஸன ரம்புக்வெல அவர்களின் தலைமையிலும் கட்புலத் துறைமண்டபத்தில் கலாநிதிசீ.தேனுவரதலைமையிலும் நடனத் துறைமண்டபத்தில் பேரா.சிவலிங்கராஜா தலைமையிலும் நாடகப் பிரிவுமண்டபத்தில் ShreenSaroorஅவர்களின் தலைமையிலுமாகவெவ்வேறு இடங்களில் வெவ்வேறுதலைப்பைமையப்படுத்தி இருபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

சனிக்கிழமை மாலை நேர அமர்வானது பிற்பகல் 02.30 தொடக்கம் 5.00 மணிவரையுள்ளகால வேளைக்குள் புலமைத் தலைவர் கலாநிதி தர்ஸன் அம்பலவாணர் அவர்களின் வழிநடத்தலில் Art and Costume of  Numerical Minorities of Srilanka எனும் தலைப்பு சார்ந்துவள்ளிபுரம் வனக்குறவர்களின் வழிபாட்டு மரபுகளும் அழகியல் வெளிப்பாடுகளும் என்ற கட்டுரையும் கிழக்கிழலங்கை வேடுவ சமூனத்தினரின் வாழ்வியல் கலைகள் என்ற கட்டுரையும் நவீனஉலகமயமாக்கமும் பக்கீர்களதுபாரம்பரிய ஆற்றுகைகளும் என்றஆய்வுக் கட்டுரையும் காப்பிரிச் சமூகத்தினரதுபாரம்பரியக் கலைகளில் பைலாகலைவடிவம் என்றஆய்வுக்கட்டுரையும் வேடர் சமூகமும் புலிக்கூத்தும் என்றகட்டுரையும் Portuguse Burghers  என்றகட்டுரையும் வாசித்துக் காட்டப்பட்டது
சுருக்கமாகக் கூறின் கட்டுரைகளின் தலைப்புகளைவைத்து நோக்குகையில் சர்வதேச ஆய்வு மாநாடானது பல்லினபன்மைத் தன்மையானவிடயங்களை ஆராய்வதாக அமைந்தது. அத்தோடு பல்லின இனம் மதம் மொழிவர்க்கம் சடங்கு சார்ந்த புலமைகளை தர்க்கரீதியான கருத்தியல் விடயங்களைவெளிப்படுத்துவதாயுள்ளது.இன்றுஉலகம் முழுவதும் பரவலாகபன்மைத்துவம் சார்ந்தகாத்திரமான உரையாடல் பலபாகங்களிலும் நடைபெற்றுக் கொண்டுவரும் வேளையில் இம்மாநாட்டின் முக்கியத்துவமும் தேவையாகின்றதுஎன்றால் மிகையாகாது.

சர்வதேச ஆய்வு மாநாடனது சர்வதேச சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையிலே அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் ஒழுங்கு விதிகளுக்கேற்ப வாசிக்கப்பட்டது. சர்வதேச ஆய்வுமாநாட்டை நடாத்திய பெருமை சுவாமிவிபுலானந்தா அழகியற் கற்கைகள்நிறுவகப் பணிப்பாளர், பதிவாளர், நிதியாளர், சிரேஸ்ட விரிவுரையாளர்கள்இ கனிஸ்ட வரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாராஊழியர்கள் போன்றவர்களைச் சாரும்.









SHARE

Author: verified_user

0 Comments: