20 Sept 2016

மட்டு. மாவட்ட ஆரம்பக் கூட்டத்திகதிகள் மாற்றம்

SHARE
மட்டக்களப்பு மாவட்ட பெரும்போகத்துக்கான ஆரம்பக்கூட்டங்களுக்கான திகதிகள் இவ்வாரத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் கோரளைப்பற்று வடக்கு மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பரிவுகளின் கூட்டங்கள் மாத்திரம் நடைபெற்றுள்ள நிலையில் ஏனை ஆரம்பக் கூட்டங்கள் எதிர்வரும் வாரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தொழில்நுட்ப செயற்பாட்டுக்குழுக் கூட்டம், கிழக்கு மாகாண சபை அமர்வுகள், பாராளுமன்ற அமர்வுகள் இத்திகதிகளுக்குள் நடைபெறுகின்றமையினால் விவசாயப்' பெரும்போக ஆரம்பக் கூட்டங்களை 27 மற்றும் 29ஆம் திகதி களில் நடத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும். அதே போல் மாலை 2.30 மணிக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமம், கித்துள்வெவ, வெலிக்காகண்டி, சிறிய நீர்ப்பாசனத் திட்டத்துக்கான பெரும்போக ஆரம்பக் கூட்டம் செங்கலடியிலுள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும்.

அதே போன்று 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு போரதீவு பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக ஆரம்பக் கூட்டம்  போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திலும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக ஆரம்பக் கூட்டம் மாலை 2.30 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: