20 Sept 2016

போரதீவுப்பற்று பிரதேத்தில் நாளாந்தம் 72000 லீற்றர் குடிநீல் வினியோகம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வரட்சி நிலவி வருகின்ற இந்நிலையில், மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் நிலவி வரும் வரட்சி நிலமை காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளன.
கோவில்போரதீவு, பெரியபோதீவு, வெல்லாவெளி, பொறுகாமம், ஆகியவற்றில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ள இந்நிலையில் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள தும்பேங்கேணிக் குளத்தின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளது.

மனிதர்களுக்கு மாத்திரமின்றி கால்நடைகளும் குடிநீர் இன்றி அலைந்து திரிகின்றன.

இந்நிலையில் போரதீவுப்பற்று பிரதேச மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நாளாந்தம் 72000 லீற்றர் குடிநீர் வவுசர்கள் மூலம் வழங்கி வருவதாகவும், இது மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அடுத்துவரும் திங்களில் அதிகரிக்கப்படும் எனவும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஆதித்தன் செவ்வாய்க் கிழமை (20) தெரிவித்தார்.

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மாலை வேளையில் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்படுவதோடு மழை மூட்டத்துடனும் காணப்பட்டு வருகின்றது அதேவேளை மாவட்டத்தில் சில இடங்களில் சிறியளவு மழையும் மாலை வேளையில் பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: