16 Sept 2016

வைத்தியசாலை ஊழியர்கள் தங்கள் சொந்த உறவினர்களைப் போல் சகல நோயாளர்களுடனும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் - டாக்டர்.முரளிவல்லிபுரநாதன்

SHARE
(தாஸன்)

வைத்தியசாலை ஊழியர்கள் தங்கள் சொந்த உறவினர்களைப் போல் சகல
நோயாளர்களுடனும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் -
டாக்டர்.முரளிவல்லிபுரநாதன்

நோயாளர்களுடனான ஆரோக்கியமான தொடர்பாடல் திறனை விருத்தி செய்வது சம்பந்தமான ஓர் ஆய்வுக்கருத்தரங்கு அண்மையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் இராசரத்தினம் முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

முதன்மை அதிதியாகவும் வளவாளராகவும் விசேட சமூகவைத்திய நிபுணர் டாக்டர்.முரளிவல்லிபுரநாதன் இதன்போது கலந்து கொண்டு  சிறப்பித்திருந்தார்.

அவர் இதன்போது மேலும் குறிப்பிடுகையில்….

நோயாளர்களுடனான முறையான ஆரோக்கியமான தொடர்பாடலை பேணும் விதம் பற்றி விரிவாகதெரிவித்தார். நோயாளர்களின் நோயின் தீவிரம் பற்றியும் அதிர்ச்சிகரமானதும் துக்ககரமானதுமான செய்திகளை நோயாளர்களுடனும் அவர்களது உறவினர்களுடனும் எவ்வாறு பரிமாறலாம் என்பதை உதாரணங்களுடன் மிகவிரிவாகவிளக்கிக் கூறினார்.

அத்துடன் தொலைபேசியின் ஊடாகநோயாளர்களின் தகவல்களை அவர்களது உறவினர்களுடன் பரிமாறுவதிலுள்ள சட்டச்சிக்கல்களையும் எவ்வாறு சரியானமுறையில் நடைமுறைப்படுத்தலாம் என்பதை ஒலிஒளிக் காட்சிகளுக்கூடாகவிளக்க மளித்திருந்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சகல நோயாளர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் வைத்தியசாலை ஊழியர்கள் சொந்த உறவினர்களைப் போல் அன்புடனும் மரியாதையுடனும் உரியமுறையிலும் சிகிச்சை முறை சரியானவிதத்தில் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்திக் கூறியிருந்தார்.

இக்கருத்தரங்கில் வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்திய நிபுணர்கள் சிரேஸ்ட வைத்திய அதிகாரிகள் உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நிர்வாகஉத்தியோகத்தர் பொதுமுகாமைத்துவ உதவியாளர்கள் தாதிய பரிபாலகி தாதியசகோதரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் சிற்றூழிய மேற்பார்வையாளர்கள் சுகாதார உதவியாளர்கள் எனபலரும் பங்கு பற்றிதங்களது ஆக்கபூர்வமானகருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன் நடைமுறையில் ஏற்படும் தொடர்பாடல் சம்பந்;தமான ஐயங்களுக்கான தெளிவினையும் பெற்றுக்கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: