16 Sept 2016

முத்தமிழ் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டோம் - கண்டன அறிக்கை.

SHARE
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்து கொண்டு கலை நிகழ்வுகளை மேடையேற்ற உத்தியோக பூர்வ அழைப்பு
விடுக்கப்பட்டு அங்கு சென்றபோது வாசலிலே வைத்து இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் எம்மை திருப்பி அனுப்பி விட்டதாகத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டம் தேற்றாத்தீவைச் சேர்ந்து தேனுகா கலைக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது….

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் எமது கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் வில்லிசை நிகழ்வு 15.09.2016 அன்று நடைபெறும் என அறிவிக்கப் பட்டதுடன் இது தொடர்பில் பத்திரிகையிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

அனைத்து ஏற்பாட்டுடனும் உடை ஒப்பனைகளுடனும், வியாழக்கிழமை (15) மாலை முத்தமிழ் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்ற எம்மை வாசலிலே வைத்து உமது நிகழ்வு இன்று இல்லை என எமக்கு எந்த வித முன்னறிவித்தலுமின்றி எம்மை திருப்பி அனுப்பினர் இது எந்த விதமான நியாயமான செயல்? 

மழை என்று காரணம் காட்டுவதென்றால் ஏனைய நிகழ்வுகளையும், ஒதுக்கியிருக்கலாம் அந்தக் குழுவினர். எனவே எமது கலைப் பயணத்தில் இந்த அவமானம் புதிது என்பதாலும், இனிமேல் இவ்வாறானதொரு பிழை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், இந்தக் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: