28 Sept 2016

தகவல் தொழிநுட்பமும் மொழித் தேர்ச்சியும் மாணவர் சமுதாயத்துக்கு இன்றியமையாதவை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
சமகாலத்தில் தகவல் தொழிநுட்பமும் தாய் மொழி உட்பட சர்வதேச மொழித் தேர்ச்சியும் மாணவர் சமுதாயத்துக்கு இன்றியமையாதவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்ற விளையாட்டு மற்றும் கல்வி உட்பட புறக்கிருத்திய தேர்ச்சிகளில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.ஏ.  நஜீப் தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பெர் 27,2016) இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்@ தற்போதைய நவீன தொழினுட்ப யுகத்தில் பல சாதனைகளை இலகுவாக அடையக் கூடியதாகவுள்ளது.

ஆயினும், நமது நாட்டிலுள்ள பட்டதாரிகள் இன்னமும் “வேலையற்ற பட்டதாரிகள்” என்ற பதத்தோடு வீதிக்கு வந்து போராடி அரச வேலை பெறுவதிலேயே ஆர்வம் காட்டும் மனோநிலை நமது கல்வித் திட்டத்திலுள்ள குறைபாடே அன்றி வேறில்லை.

சிறந்த மொழியாற்றலும், தொழினுட்ப அறிவுமிருந்தால் இந்த தொழினுட்ப யுகத்தில் நீங்கள் வேலைவாய்ப்பிற்கோ, வருமானம் ஈட்டுவதற்கோ அஞ்ச வேண்டிய தேவை இல்லை.

ஆனால், இவற்றை அறியாதவர்களாக சரியான திட்டமிடலின்றி நாம் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்.

இன்னமும் ஆக, அற்பமான பொருட்களைக் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றோம். ஏன் நமது சிந்தனைத் திறன் எங்கே போனது?

இந்த சிந்தனை மாற்றியமைக்கப்பட வேண்டும். நவீன தொழினுட்ப வசதிகளை நமது வாழ்க்கையை நாசமாக்குவதற்குப் பயன்படுத்துவதை விட அதிகம் அதிகம் சாதிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டால் அதனால் வீடும் நாடும் சுபீட்சமடையும்.
பட்டாதாரிகள் தெருக்களில் வந்து குந்தயிருந்து வேலை கேட்டுப் போராட்டம் நடத்தும் நிலைமையும் மாறும்.” என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: