25 Jul 2016

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய மூவர் கைது

SHARE
கஞ்சாவை தம்வசம் விற்பனைக்காக வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை ஞாயிறன்று இரவு (ஜுலை 24, 2016) தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான முதலாவது நபரிடமிருந்து 4500 மில்லிகிராம்;, இரண்டாவது நபரிடமிருந்து 4300 மில்லிகிராம்;, மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 8000 மில்லிகிராம் கஞ்சாவுமாக மொத்தமாக மூவரிடமிருந்தும் 16800 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் முறையே 18, 20, 22 வயதுகளையுடையவர்கள் என்றும் மூவரும் ஏறாவூர் - 2, பள்ளியடி வீதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர்கள் ஏறாவூர் பள்ளியடி வீதியில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: