20 Jul 2016

மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

SHARE
அம்பாறை மாவட்டத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் அலுவலகமொன்று சனிக்கிழமை (16) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. 

இந்த அலுவலகத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் வாழும் சகல இன மக்களும் தத்தமது தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், கிழக்குப் பிராந்திய பிரதிப் பொது முகாமையாளர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அம்பாறை இணைப்பாளர் உட்பட பலர் பங்குபற்றினர்.
ஜெம்சாத் இக்பால்

SHARE

Author: verified_user

0 Comments: