இம்முறை முதன் முறையாக கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொள்ளும் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் வாவிக்கரைப் பூங்காவில் வெள்ளிக்கிழமை (ஜுலை 01, 2016) பிற்பகல் 4
மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளதாக முதலமைச்சரின் பிரத்தியேக இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், படையினர், மதப் பெரியார்கள், பொலிஸார் பொதுமக்கள் என சுமார் 2000 மேற்பட்டோர் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்றையதினம் சிறுவர் களியாட்டப் பெருநாள் பூங்காவும் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது என்றும் நாஸர் கூறினார்.
0 Comments:
Post a Comment