19 Jun 2016

கனரக லொறி குடை சாய்வு

SHARE
கிரியுல்ல பகுதியில் பொருட்களை ஏற்றிச் சென்ற கனரக லொறி குடைசாய்ந்ததில் லொறிச் சாரதியும் நடத்துனரும் காயமடைந்து கிரியுல்ல வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கிரியுல்ல – குருநாகல் வீதியில் சென்று கொண்டிருந்த சரக்கு லொறி சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் (ஜுன் 18, 2016) பாதையில் சறுக்கி குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் குடைசாய்ந்த லொறியும் சிறிது சேதத்திற்குள்ளாகியுள்ளது. சற்று நேரத்தில் குடைசாய்ந்த லொறியிலிருந்த பொருட்கள் வேறு லொறிக்கு மாற்றப்பட்டு குடை சாய்ந்த லொறியும் புரட்டி எடுக்கப்பட்டு பாதை சீர் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: