6 Jun 2016

சட்டவிரோத மதுசாரம் விற்பனை செய்த நபர் கைது 47 போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.

SHARE
அரசாங்க அதிபரின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் மதுசாரம் (சாராயம்) விற்பனை செய்த ஒருவரை ஞாயிற்றுக் கிழமை (05) கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவவதாவது…

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் கிராமத்தில் அரசாங்க அதிபரின் அனுமதியின்றி சட்ட விரோதமான முறையில் மதுசாரம் (சாராயம்) விற்பனையில் செய்த ஒருவரை களுவாஞ்சிகுடி பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து  சட்டவிரோத சராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது கால் போத்தல் அளவுள்ள 47 சாராயப் போத்தல்களையும், பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை திங்கட் கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி சனத் நந்தலாலின் கட்டளைக்கமைய பொலிஸ் சார்ஜன் வீரக்கோண் (23232) , மற்றும், ஜயவர்த்தன (78199) அமில (69249) , திசநாயக்க (82654) ஆகிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இந்நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: