6 Jun 2016

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தம்பதி படுகாயம்

SHARE
மட்டக்களப்பு வாழைச்சேனை நாவலடிப் பகுதியில் சனிக்கிழமை 04.036.2016 மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர்களான தம்பதியினர் படுகாயமடைந்ததாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயங்களுக்குள்ளான புதிய காத்தான்குடி-06, ஹொஸ்டல் வீதியைச் சேர்ந்த கே.எம்.என். றாபி (வயது 32), எல்.ஏ. ஹ{ஸ்னா (வயது 22) ஆகிய கணவனும் மனைவியும் முன்னதாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் என்றும் விபத்துக்கள்ளான பெண் 6 மாத கால கர்ப்பிணிப் பெண் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி வாழைச்சேனைப் பொலிஸார மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: