27 May 2016

பத்திரிகையாளர் பி.எம்.எம்.ஏ. காதருக்கு பாராட்டு விழா

SHARE

(டிலா)


மருதமுனையை சேர்ந்த பத்திரிகையாளர் பி.எம்.எம்.ஏ. காதர் இன் 28 வருடகால சேவையை பாராட்டி மருதமுனை புதுப்புனைவு இலக்கியவட்டம் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழா நாளை (28.05.2016) மருதமுனை பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கவிஞர் மருதமுனை ஹஸன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அஹமட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

பத்திரிகையாளர் பி.எம்.எம்.ஏ. காதரை பாராட்டி கெளரவிக்கும் இந்த நிகழ்வில் 'தீரா- மை' சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான ஏ.எல் எம்.ஸினாஸ் நிகழ்வினை தொடுத்து வழங்கவுள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: