இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர் முகப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றதுடன், ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்று ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வுக்கு மதகுருமார்கள், பெண்கள், மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண விவசாய அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கூட்டமைப்பின் தொகுதி அமைப்பாளர்கள், புலனாய்வுத் துறையினர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இறுதியாக அன்னதானமும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment