30 May 2016

இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கம் கிழக்கு மாகாணத்தில் அனைத்து கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வுக்கான கோரிக்கைகளைக் கையளிப்பு

SHARE
இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கம் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வுக்கான கோரிக்கைகளை கிழக்கு மாகாண
முதலமைச்சரிடம் கையளித்துள்ளதாக சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் 13வது மகாசபைக் கூட்டம் (ளுசiடுயமெய ழேn யுஉயனநஅiஉ வுசயனந ருnழைn) முதன்முறையாக இவ்வருடம் கிழக்கு மாகாணம் ஏறாவூரில் சனிக்கிழமை 28.05.2016 இடம்பெற்றது.

இம்மகா சபைக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிடம் கிழக்கு மாகாணத்தில் அனைத்து கல்வி சாரா ஊழியர்களின் நூலகப் பணியாளர், ஆய்வு கூட உதவியாளர்கள், மற்றும் ஏனைய பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொள்ளல்.

அரச விடுமுறை தினங்களில் கடமை புரிந்தால் நாட்சம்பளத்தைப் பெறல்,
02ஃ 2013 சுற்று நிருபத்தின் பிரகாரம் அமைய, தற்காலிகமாக கடமையாற்றிய காலத்தை சேவையினுள் உள்வாங்கச் செய்வதற்கு சம்பளத்திலிருந்து 8 வீதத்தை மீளச் செலுத்தினால் மொத்த சேவைக் காலத்தில் உள்வாங்கப்படுதல்,
காவல் உத்தியோகத்தர்களுக்கான 67 வருட பழைய அநீதியான சுற்றுநிருபம் ஒன்று தற்காலத்தில் செயற்படுத்துவதை தவிர்த்து 9 மணித்தியால காவல் சேவையை வென்றெடுக்கும் போராட்டத்தைச் செயற்படுத்தல் போன்ற கோரிக்கைகள் கையளிக்கப்பட்டன. 

SHARE

Author: verified_user

0 Comments: