செவ்வாய் கிழமை முதல் நெல்லூர் கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதியை 25 வருடங்களுக்கு பிற்பாடு கிராமிய பொருளாதார அலுவல்கள் கௌரவ பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளரும் மாவட்ட முகாமையாளரும் இணைந்து நெல்லூர் நரிபுல் தோட்டம் மகிழவெட்டுவான் ஆயித்தியமலை மற்றும் கரடியனாறு பாடசாலைகளுக்கும்இ கிராம மக்களுக்கும் இப் போக்குவரத்து சேவை ஆராம்பிக்கபட்டுள்ளது.
இச் சேவையினை ஆரம்பிக்க உதவிய முகாமையாளர்களுக்கு நன்றி கூறுவதோடு இப் போக்குவரத்துக்கான பாதைகள் மிகவும் பளுதடைந்துள்ளமையால் எதிர் காலத்தில் எமது பிரதி அமைச்சர் அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டில் பாதை புனரமைக்கப்படவும் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகள் மேட்கொள்ளபடும். இப் போக்குவரத்து சேவை பல ஆண்டுகளாக கால் நடையாக பாடசாலைக்கு சென்ற மாணவச்செல்வங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment