மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எஸ்.எம்.எம்.அமீர் அலி,அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஒரு வருடத்திற்கு பின்னர் இன்று காலை நடைபெற்றுவருகின்றது.
இதன்போது கடந்த ஆண்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 2500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர்,கிழக்கு மாகாண அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாவட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திப்பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
0 Comments:
Post a Comment