நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் தயார் நிலையிலுள்ளதாக சீனாவின் தேசிய வெளியீடு மற்றும் ஊக்குவிப்பு அமைப்பின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவுக்கும் சீனாவின் தேசிய வெளியீடு மற்றும் ஊக்குவிப்பு அமைப்பின் குழுவினருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அக்குழுவினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், தொழில்நுட்பம் மற்றும் அச்சிடும் துறையில் தமது அறிவுகளை இலங்கை நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள தாம் தயாரகவிருப்பதாக தெரிவித்தனர்.
அத்துடன் இங்கு கருத்து தெரிவித்த சீனாவின் தேசிய வெளியீடு மற்றும் ஊக்குவிப்பு அமைப்பின் தலைவர் கோ ஷூயா ஒயின் (Guo Zhia Oin), முதல் தடவையாக இலங்கையிலிருந்து அரச மற்றும் தனியார் ஊடகவியலாளர்கள் 100 பேர் அடங்கிய குழுவினரை தமது நாட்டுக்கு வரவழைத்து பயிற்சி வழங்க தாம் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்பனாவவும் உடனிருந்தார்
அத்துடன் இங்கு கருத்து தெரிவித்த சீனாவின் தேசிய வெளியீடு மற்றும் ஊக்குவிப்பு அமைப்பின் தலைவர் கோ ஷூயா ஒயின் (Guo Zhia Oin), முதல் தடவையாக இலங்கையிலிருந்து அரச மற்றும் தனியார் ஊடகவியலாளர்கள் 100 பேர் அடங்கிய குழுவினரை தமது நாட்டுக்கு வரவழைத்து பயிற்சி வழங்க தாம் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்பனாவவும் உடனிருந்தார்
0 Comments:
Post a Comment