8 Sept 2015

திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

SHARE
(தனு)

தெட்சண கைலாயமென சிறப்புற்று விளங்கும் பழம் பெரும் பதியாம் திருப்பழுகாமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமாவேற்குடாப் பிள்ளயார் ஆலய துவஜாரோகண மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று திங்கட் கிழமை (07) துலாலக்கின சுபமுகூர்த்த வேளையில் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்தி ப+ர்வமாக இடம்பெற்றது.
விநாயகர் வழிபாடு, புணியாவாசனம், வாஸ்துசாந்தி, என்பன இடம்பெற்று விஷேட ப+சைகளின் பின் கொடிச்சீலை உள்வீதி வலம் வந்து உற்சவகால ஆலயப் பிரதமகுரு சிவ ஸ்ரீமு.கு. விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது.

எதிர்வரும் 17.09.2015 அன்று தேரோட்டமும் 18..9.2015 இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் இவ்வாலய மஹோற்சவம்  நிறைவுபெறுவுள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: