24 Sept 2015

ஆடு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

SHARE
ஆடு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங் கொன்று வியாழக்கிமை (24) மட்டக்களப்பு மாவட்டம்  தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் நடைபெற்றது.

வேள்ட விஷன் நிறுவனத்தின் அனுசரணையில், போரதீவுப்பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 30 ஆடு வளர்ப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தும்பங்கேணி கால்நடை வைத்திய அலுவலகத்தின் கால்நடை அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,பி.ஜெயந்தன் கலந்து கொண்டு ஆடு வளர்க்கும் முறைகள், ஆட்டுக் கொட்டில் அமைக்கும் முறை, ஆடுகளை கற்பகாலத்தில் பராமரிக்கும் விதம், தீவனங்கள், தடுப்பூசிகள் வழங்கல் போன்ற பல விடையங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: