மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர் ஒருவர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு வியாழக்கிழமை தோற்றியதாக அச்சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில்; கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இந்த மாணவர் வைக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடியிலுள்ள வீடொன்றில் தங்கநகைகள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டின் பேரில் இந்த மாணவர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (2.8.2015) அன்று கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment