கிழக்கு மாகாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக சுமார் 2,250,00 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாணத்தின் மூன்று மாவட்டங்களிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் அறிவித்துள்ளன.
இவ்வரட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் 1,25,000 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 68,000 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 26,000 பேரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுபோக நெல் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment