22 Jul 2015

உகந்தைமலை முருகன் ஆலய கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது

SHARE

கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம்  கடந்த 17 ஆம் ஆரம்பமாகியது.   பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின்
பல பாகங்களிலும் இருந்து வந்திருந்தார்கள்.





வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த முருகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் எழுந்தருளிய முருகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார். அங்கு இடம்பெற்ற பூஜைகளின் பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.



ஆலய வண்ணக்கர் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற  கிரியைகளை ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நடாத்தி வைத்தார்.



கதிர்காம யாத்திரைக்காக நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து வருகை தந்த அதிகளவான யாத்திரியர்கள் உகந்தை முருகன் ஆலயத்தில் தங்கியிருந்து நேற்று இடம்பெற்ற கொடியேற்ற வழிபாடுகளில் கலந்து கொண்டனர்



பின்னர் தங்களது புனிதப்பணயத்தை உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து மேற்கொண்டனர்.



இதேவேளை பெருமளவிலான பௌத்த அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.



 ஆலயத்தின் கொடியேற்றத்தினை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவுடனும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவத்துடனும் இவ்வருட திருவிழா நிறைவுறவுள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: