இலங்கை பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா தலைமையில் பா.அரியநேத்திரன் ஆகியோர் சென்று இந்த வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டுப்பேர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பட்டிருப்பு தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா மற்றும் பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் மட்டக்களப்பு தொகுதியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,பிரதிக்கல்வி பணிப்பாளர் சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.சௌந்தரராஜா ஆகியோரும் கல்குடா தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,தமிழ் ஆசிரியர் எஸ்.அமல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டதுடன் வேட்புமனுதாக்கல் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், வேட்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,புதிய முகமாக தேர்தலில் குதிக்கவுள்ள பிரதிக்கல்வி பணிப்பாளர் ஞா.சிறிநேசன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது வேட்பாளர்களுக்கு ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன் தமது ஆதரவினையும் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment